நம்மாழ்வார் நினைவு நாளில் இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற உறுதிமொழியேற்பு
நம்மாழ்வார் நினைவு நாளில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் தமிழகத்தை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்றவும் அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி வட்டம் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நம்மாழ்வார் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.









