புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி தீவிரம்

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

News image

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்

Updated On :4 பிப்ரவரி 2021, 8:16 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

திருநெல்வேலி சிந்துபூந்துரை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வராஜ்(39). இவர் கடந்த புதன்கிழமை கொக்கிரகுளம் தைப்பூச மண்டபம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அவர் உடமைகள் அனைத்தும் ஆற்றங்கரையில் இருந்த நிலையில் செல்வராஜை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆற்றில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை தாமிரவருணி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.