கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated on
1 min read


ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் செல்லும் கீழ்பவானி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட்​ தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இந்நிலையில், தற்போது இந்த கால்வாயில் 940 கோடி மதீப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. தமிழக அரசின் இந்த கான்கீரிட் அமைக்கும் திட்டத்தால் விவசாய விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்கத்தினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாடத்தின் போது கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீர் முழுமையாக பதிக்கும் என்றும் தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com