தேமுதிக சார்பில் போட்டியிட பிப். 25 முதல் விருப்பமனு தாக்கல்:  விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
Updated on
1 min read


   
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம். விருப்பமனு தாக்கல் செய்ய விரும்புவோர் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் மார்ச் 5 ஆம் தேதி வரை விருப்பமனுவை தாக்கல் செய்யலாம்.

விருப்பமனு கட்டணமாக தமிழகத்தில் பொதுத் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com