புத்தாண்டு: திருப்பூரில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பூரில் உள்ள கோவில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன்
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன்
Updated on
1 min read


திருப்பூரில் உள்ள கோவில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com