தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கூத்தாநல்லூர்: மருத்துவ மாணவர்களுக்குப் பாராட்டு விழா 

திருவாரூர் மாவட்ட யாதவ ஆலோசனை மையம் சார்பில், மருத்துவ மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 

News image
விருது பெறும் மருத்துவ மாணவர்கள்
Updated On :4 ஜனவரி 2021, 9:28 am

DIN

திருவாரூர் மாவட்ட யாதவ ஆலோசனை மையம் சார்பில், மருத்துவ மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 

லெட்சுமாங்குடி கம்பர் தெரு மாரியம்மன் கோயிலில், கூத்தாநல்லூர் வட்ட யாதவ ஆலோசனை மைய தொடக்கம், நான்கு மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் கிழக்கு மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

Story image

முப்பெரும் விழாவிற்கு, யாதவ ஆலோசனை மைய மாவட்டத் தலைவர் ஆர்.கே.பாலகுணசேகரன் தலைமை வகித்தார். மாநில யாதவ மைய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பொறியாளர் நன்னிலம் ஜி.ஜெயராமன், மயிலாடுதுறை பி.பார்த்தீபன், மாநிலப் பொருளாளர் ஆர். காயாம்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் வட்ட மைய செயலாளர் பாலு வரவேற்றார். கூத்தாநல்லூர் வட்ட யாதவ ஆலோசனை மைய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது. தலைவர் ப.கண்ணன், துணைத் தலைவர்கள் பிரகாஷ், அய்யப்பன், செயலாளர் பாலு, இணைச் செயலாளர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், ராமு,பொருளாளர் இளங்கோ மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகத் தலைமையாசிரியர் உதயகுமார், வைகுண்டம் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 

தொடர்ந்து, மருத்துவக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்வில், திருவாரூர்  மாவட்ட நிர்வாகிகள் பூங்குன்றன், பாலகுமார், கண்ணன், செல்வக்குமார், கலியமூர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூத்தாநல்லூர் தலைவர் ப.கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.