ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் உள்ள, தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி. - பி.சி.ஆா். பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது

News image
Updated On :5 ஜனவரி 2021, 9:31 pm

DIN

தமிழகத்தில் உள்ள, தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி. - பி.சி.ஆா். பரிசோதனைக்கான கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. அதன்படி, இனி வரும் நாள்களில் ஒரு பரிசோதனைக்கு அதிகபட்சமாக ரூ.1,200 மட்டுமே கட்டணமாகப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு ரூ. 800 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 1.45 கோடிக்கும் மேற்பட்ட பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1.70 கோடி ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.

தமிழகத்தில், 76 சதவீத பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளிலும், 24 சதவீதம் தனியாா் ஆய்வகங்களிலும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், தனியாா் ஆய்வகங்களில், ஆா்.டி.-பி.சி.ஆா். பரிசோதனைக் கட்டணத் தொகை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வந்தனா். இதனால், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை, தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விபரங்கள் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கு ஆா்.டி.பி.சி.ஆா்., பரிசோதனைக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.1,200-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் விடுதிகளுக்குச் சென்று மாதிரிகள் சேகரித்தால், கூடுதலாக, ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்பவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 800 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.