
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மிட்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏசி. தேவேந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பழனி, கிருஷ்ணன், கிராம நிர்வாக உதவியாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேட்டி, சேலைகளை வாங்கிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.