கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவு
சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.


சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மதுரை மாவட்டம் திருமலை நாயக்கா் அரண்மனை, சிவகங்கை மாவட்டம் மருதுபாண்டியா் கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்குளம், பூண்டி அருகா் கோயில், தடாகபுரீஸ்வரா் கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரா் கோயில் ஆகியவற்றில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட எட்டு வரலாற்றுச் சின்னங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகள் கணபதி ராஜாவுக்கு மதுரை திருமலை நாயக்கா் அரண்மனையிலும், வீ.முருகதேவிக்கு நெல்லை மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும் காவலா் பணியிடத்துக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...