ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த முகாமில் பெறப்பட்ட திருத்தங்களை மேற்கொண்ட துணை வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.
அதன்படி, மொத்தம் 10,27,804 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 5,00,626, பெண் வாக்காளர்கள் 5,27,127, மூன்றாம் பாலினத்தவர்கள் 51 ஆக உள்ளனர்.