சென்னை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (ஜன்.29) மாலை 4.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை பிப்.2 ஆம் தேதி கூடும் நிலையில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க இருக்கக்கூடிய அம்சங்கள் குறித்தும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தேர்தலுக்கு முன்பாகவே அரசின் இடைக்கால பெட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்தும், வேளாண் சட்டங்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்து கேள்வி எழுந்தால் அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.