விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சிட பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.