சென்னை, கலைவாணர் அரங்கத்தில், இன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. மற்றும் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் அவர்கள் முன்னுரை வழங்கினார். இக்கூட்டத்தில், செய்தித்துறை அமைச்சர் தமிழரசு சந்தா, எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் அறிவிப்புகள், பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள், நினைவிடங்களைச் சிறப்பாகப் பராமரித்தல், நிர்வாகத்தில் மின்ஆளுமை பயன்பாட்டை அதிகரித்தல், மின்னணு விளம்பர (எல்.இ.டி) வாகனத்தின் பயன்பாடு மற்றும் கரோனா விழிப்புணர்வு குறித்து மாவட்டங்களில் மேற்கொண்ட பணிகள் போன்ற பொருண்மைகள் குறித்து ஆய்வு செய்தார்.