டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருத்தணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் வேருடன் சாய்ந்தது! 

திருத்தணியில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரத்தில் இருந்த சுமார் 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. 

News image
திருத்தணியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு வேருடன் சாய்ந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம்.
Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

DIN

திருத்தணி: திருத்தணியில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரத்தில் இருந்த சுமார் 100  ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. 

திருத்தணியில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை மேல் திருத்தணி பகுதியில் சாலையின் இடது ஓரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆலமரம் ஒன்று இருந்தது. 

Story image

ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆல மரத்தை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள். 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சனிக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென ஆலமரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. அப்போது எந்த வாகனமும், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் பணியாளர்களுடன் விரைந்து வந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆல மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Story image

மேலும் ஆலமர முறிந்ததால் மின்கம்பங்கள் இரண்டு உடைந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் விரைந்து சென்று புதிய மின் கம்பங்களை நட்டு மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.