நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆண்டிபட்டியில் மீன் கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் மீன் கடை உரிமையாளர் வீட்டில் செவ்வாய்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News image

ஆண்டிபட்டியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே.

Updated On :27 ஜூலை 2021, 7:20 am

DIN

ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் மீன் கடை உரிமையாளர் வீட்டில் செவ்வாய்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் உள்ள சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன்(55). இவர், ஆண்டிபட்டியில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஜாகீர் உசேன் வீட்டின் மீது எறிந்துள்ளனர். இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தத்தில், பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்து பார்த்து ஜாகீர் உசேனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடிக்க, அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை  காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.