சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நீலாங்கரை பகுதி : சரஸ்வதி நகர் வடக்கு மற்றும் தெற்கு, அறிஞர் அண்ணா நகர், எல்லையம்மன் கோயில் தெரு, பாண்டியன் சாலை பிரதான ரோடு, ஈசிஆர் பிஷேரிஸ் முதல் காவல் நிலையம், கபாலீஸ்வரர் நகர் வடக்கு 1வது பிரதான சாலை மற்றும் 2வது தெற்கு பிரதான சாலை.
வேளச்சேரி பகுதி; சாரதி நகர் பகுதி முழுவதும்.