
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 29-ம் தேதி முதல்வர் அறிவித்த நிவாரணத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டுதல் குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு நிதித்துறைச் செயலாளர் தலைவராகவும், சமூக நலன் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சமூக நலத்துறை ஆணையர் உள்ளிட்டோரும் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.