காவிரியில் தண்ணீர் திறப்பை உறுதி செய்யக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்க ஷெகாவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
காவிரியில் தண்ணீர் திறப்பை உறுதி செய்யக் கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Updated on
1 min read

காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்க ஷெகாவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை சார்ந்தே காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. 
காவிரியில் நீர் திறக்கப்படாவிடில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்படும். 
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com