கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் மேதகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில்... கவியரசுவிற்கு மாலை அணிவிக்க வேண்டுமென்றேன் ஆளுநர் செல்லலாமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் தமிழ் ஆர்வலராக செல்கிறேன் எனப்புறப்பட்டு ஆளுமை மிகுந்த வாழ்க்கை தத்துவத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச்சென்ற மாகவிக்கு என் எளிய தமிழ் வணக்கத்தை செலுத்தி வந்தேன்...என்று தெரிவித்துள்ளார்.