தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி பாரூர் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஜூலை 1 முதல் நவம்பர் 12 வரை சுழற்சி முறையில் நீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2021, 11:35 am

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஜூலை 1 முதல் நவம்பர் 12 வரை சுழற்சி முறையில் பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும், பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும், சுழற்சி முறையில் தண்ணீர் விட வேண்டும். 

நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் கன அடி வீதம், 01.07.2021 முதல் 12.11.2021 வரை, மொத்தம் 135 நாட்களுக்கு, 2397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 379.44 மில்லியன் கன அடிக்கு மிகாமல், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துதுவிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.