ராணிப்பேட்டை: வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு மினி வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீஸார், வாகன ஓட்டுநர் சின்னதம்பி (40), வில்சன் (40) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.