காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: வேல்முருகன்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது குறித்து பேசிய வேல்முருகன், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் (கோப்புப்படம்)

Updated On :6 மார்ச் 2021, 10:07 am

DIN


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடும்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் 8-ம் தேதி அண்ணா அறிவாலயம் வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட எத்தனைத் தொகுதிகள் வழங்கப்படும், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.