திண்டுக்கல் சட்டமன்ற பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சி சீனிவாசன் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் நபராக அதிமுக சார்பில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ம. காசி செல்வியிடம் வேட்புமனுவை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.