மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் மனு செய்தனர். இவர்களில் மூன்றிலிருந்து ஐந்து நபர்களை தேர்வு செய்து போட்டியிடும் வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளூர் திமுகவினர் கூறி வந்தனர். இதற்கிடையில் வழக்கம்போல் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசிக்கு இரண்டாவது முறையாக மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை கொடுத்துள்ளது. இதனால் மானாமதுரை சேர்ந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.