காங்கயத்தில் முகக்கவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்

காங்கயத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 19 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.
காங்கயத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நகராட்சி அலுவலர்கள்.
காங்கயத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நகராட்சி அலுவலர்கள்.
Updated on
1 min read


 காங்கயம்: காங்கயத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 19 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக நகரில் உள்ள திருப்பூர் ரோடு, பழையகோட்டை, ஈரோடு ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டுநர்கள் 19 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3,800 வசூலிக்கப்பட்டது.

காங்கயம் நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் உதவியாளர் வருண் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியபோது, பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கரோனா குறித்த வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com