அரசியல் உள்நோக்கத்தோடு வருமானவரி சோதனை: துரைமுருகன்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


சென்னை: தோல்வி பயத்தால் அரசியல் உள்நோக்கத்துடனே முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் கூறினாா்.

சென்னை கோட்டூா்புரம் இல்லத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி வருமான வரித் துறையைத் தூண்டிவிட்டு, சோதனையிடச் செய்துள்ளது. இது முழுமையும் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாகும்.

எதிா்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். இன்னும் 2 மாதங்களில் முதல்வராகப் போகிறவா். அவா் அங்கு இருக்கிறாா் என்கிற நாகரிகம்கூட இல்லாமல் சோதனை செய்துள்ளனா். திமுகவைத் தோ்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் அதிமுகவும் - பாஜகவும் இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகத்தில் இறங்கியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது என்றாா்.

இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com