போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை பொட்டி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

News image

உண்டு சாத்தான்குளத்தில் குறுத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

Updated On :28 மார்ச் 2021, 7:09 am


சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகை பொட்டி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை கிறிஸ்தவர்கள் தவகாலமாக அனுசரித்து வருகின்றனர். ஏசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடி வருகின்றனர் .இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையும் முந்தைய வாரம் குறுத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. 

கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குறத்தோலை ஞாயிறுபவனி நடைபெற்றது சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலைஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக ஆலய முன்பிருந்து தொடங்கிய பவனி ஜெபஞானபுரம் தச்சமொழி  மாணிக்கவாசகபுரம் ஆசிர்வாதபுரம் பெருமாள் சுவாமி கோயில் வழியாக வந்து மீண்டும் ஆலயம்  முன்பு நிறைவடைந்தது.

இதையடுத்து தேவாலயத்தில்  சேகரகுரு குரு அல்பர்ட் பாஸ்கர் ராஜ்தலைமையில் துணை குரு ஷிபா பாஸ்கர் முன்னிலையில் ஞாயிறு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் செயலாளர் தியோஷிஸ் சசிமார்சன், பொருளாளர் கிங்ஸ்டன்ஹெர்பெர்ட் சபை மன்ற நிர்வாகிகள் சசிகரன், குணசீலன் தங்கத்துரை உள்ளிட்ட திரளான சபைமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.