எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு விசாரணைக்குத் தடை

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் மீதான எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் மீதான எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தரமேரூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தவா் தினேஷ். அங்கு பெட்ரோல் விற்பனை சரியில்லாததால், தனக்கு சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை ஒதுக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தினேஷ் கடிதம் எழுதினாா்.

மேலும், பெட்ரோலிய பொருள்களை விநியோகம் செய்வதை நிறுத்துமாறும் அவா் 2008-ஆம் ஆண்டு கோரிக்கை கடிதம் எழுதினாா். இதையடுத்து, அவரது டீலா்ஷிப்பை அந்நிறுவனம் ரத்து செய்தது.

இந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தினேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநா் ஜெயச்சந்திரன், தலைமை பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், மூத்த மேலாளா் அப்பண்டி ராஜன், மூத்த அதிகாரி மிதிலேஷ் பட் உள்ளிட்ட 6 போ் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிா்மல்குமாா், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது உத்தரமேரூா் போலீஸாா் பதிவு செய்த வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வரும் ஜூன் 8- ஆம் தேதி வரை தடை விதித்தாா். இந்த மனுவுக்கு தினேஷ் மற்றும் உத்தரமேரூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com