பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தொட முயன்ற குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ரா. கதிர்வேல் (32) பொறியியல் பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப நிறு
உசிலம்பட்டியில் 3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
உசிலம்பட்டியில் 3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை
Published on
Updated on
1 min read

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ரா. கதிர்வேல் (32) பொறியியல் பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 2 வயதில் அன்புச்செல்வன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். தற்போது கரோனா பொதுமுடக்க காலமாக இருப்பதால் வீட்டில் இருந்து, நிறுவனப் பணிகளை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் செல்லும்  உயர்அழுத்த மின்கம்பி புதன்கிழமை காலை திடீரென அறுந்து விழுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அன்புச்செல்வன் மீது மின்கம்பி பட்டது. இதைப்பார்த்து  குழந்தையைக் காப்பாற்ற ஓடிய கதிர்வேல் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில்  உயிரிழந்தார். 

குழந்தை அன்புச் செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்து மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பின்னர் அவர்  கூறுகையில், உயர் அழுத்த மின்கம்பிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அது பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த வாரமும் இதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக மின்கம்பிகளை மாற்றித் தர கேட்டுக் கொண்டுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி பெற்றுத் தரப்படும் என்றார். 

குழந்தையைக் காப்பாற்றி விட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com