சிதம்பரம்: மின் கணக்கீட்டு உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்குழும செயலாளர் சி.டி.அப்பாபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தற்போது தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கணக்கீடு செய்யாமல், கடந்த மாதம் மின் பயன்பாட்டின் கட்டணம் 2019/ மே மாதம் கட்டணத்தை வசூல் செய்யும்படி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மின் நுகா்வோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர். 2019ல் அதிகமாக பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது குறைவாக இருக்கலாம். இவா்கள் தேவையில்லாமல் கூடுதலாக தொகை செலுத்த நேரிடும் நிலை உள்ளது.
2019ல் குறைவாகப் பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது அதிகமாக இருக்கலாம். இவா்கள் பழய கட்டணம் கட்டும்போது பின்பு கணக்கீடும் போது இவா்களுக்கு மீட்டா் ரீடிங் கூடுதலாக இருக்கும். இதனால் இவா்கள் கூடுதல் தொகை செலுத்த நேரிடும். எனவே, அனைத்துத் தரப்பிலும் பாதிக்கப்படும் இது போன்ற உத்தரவை தமிழக மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும். தற்போது கடந்த மாதம் கணக்கீட்டை இம்மாதம் கட்டணமாக செலுத்த உத்தரவு போட வேண்டும் என்கிறார் சி.டி.அப்பாவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


