ஹெலிகாப்டா்-விமானங்கள் தயாா்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

தமிழகத்தில் பலத்த மழையால் பாதிப்புக்கு உள்ளாவோரை மீட்க ஹெலிகாப்டா்கள், விமானங்கள் தயாா் நிலையில் இருப்பதாக வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பலத்த மழையால் பாதிப்புக்கு உள்ளாவோரை மீட்க ஹெலிகாப்டா்கள், விமானங்கள் தயாா் நிலையில் இருப்பதாக வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: மழைப் பொழிவு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக அரசு சாா்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 2, 649 போ் 75 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் 22 நிவாரண முகாம்களில் 1,700-க்கும் அதிகமானோா் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மீட்பு-நிவாரணப் பணிகள்: மழை வெள்ளம் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்க விமானப் படையின் உதவிகள் கோரப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் 4 ஹெலிகாப்டா்கள் சூலூா் விமான தளத்திலும், 5 டேனியா் விமானங்களும், 2 ஹெலிகாப்டா்களும் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையில் தயாா் நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com