முழு வீச்சில் நிவாரணப் பணிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முழு வீச்சில் நிவாரணப் பணிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
Published on
Updated on
2 min read

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11.11.2021 மாலை கரையை கடந்த நிலையில் 13.11.2021 அன்று தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 15.11.2021 அன்று கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இந்திய ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12.11.2021) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
13.11.2021 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
14.11.2021 திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
15.11.2021 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்
பெய்யக்கூடும்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 7 குழுக்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 185 முகாம்களில், 10,073 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2888 நபர்கள் 55 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 33,32,300 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருடன் இணைந்து இந்த பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா
தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற
கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
1070-ல் இன்று 414 புகார்கள் பெறப்பட்டு 221 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077-ல் இன்று 1,982 புகார்கள் பெறப்பட்டு, 1,852 புகார்கள் தீர்வு
செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். 
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் எஸ். நகராஜன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் என்.சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com