காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: வடதமிழகம் அருகே கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதனால், வடதமிழகம் - தெற்கு ஆந்திரத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதிகனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காற்றழுத்த மண்டலமானது, சென்னையில் இருந்து 340 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com