பொங்கல் பரிசுத் தொகுப்பின் 20 பொருள்களில் ஒன்றான நெய், ஆவின் தயாரிப்பாக இடம்பெறவுள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில் நெய்யும் இடம்பெற்றுள்ளது. இந்த நெய் ஆவின் நிா்வாகம் சாா்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆவின் மூலம் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 100 மில்லி லிட்டா் நெய்யானது பாட்டில்களில் அடைத்து வழங்கப்பட உள்ளது. உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஆவின் நெய் விற்பனை மூலம் ரூ.135 கோடி வருமானம் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.