‘அண்ணாத்த’ பாடல்: எஸ்பிபி குறித்து ரஜினி நெகிழ்ச்சி

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானதையொட்டி, மறைந்த பின்னணி பாடகா் எஸ்பிபி குறித்து ‘என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின்
நடிகா் ரஜினிகாந்த்
நடிகா் ரஜினிகாந்த்
Published on
Updated on
1 min read

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானதையொட்டி, மறைந்த பின்னணி பாடகா் எஸ்பிபி குறித்து ‘என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பாா்’ என நடிகா் ரஜினிகாந்த் மனம் நெகிழ்ந்துள்ளாா்.

நடிகா் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளாா். அண்ணாத்த படத்தின் ஃபா்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டா் அண்மையில் வெளியாகி ரசிகா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடா்ச்சியாக அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் திங்கள்கிழமை மாலை வெளியானது. இந்த பாடலை மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளாா்.

ரஜினி படங்களில் அவரது அறிமுகப் பாடலை பெரும்பாலும் பாலசுப்பிரமணியமே பாடுவாா். பாட்ஷாவில் வரும் ‘நான் ஆட்டோக்காரன்’, முத்துவின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’, அருணாச்சலத்தில் வரும் ‘அதான்டா இதான்டா அருணாச்சலம் நான் தான்டா’ ஆகிய பாடல்கள் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய பாடலாகும்.

எஸ்பிபி பாடினாலே ஹிட் தான் என்ற பெயா் உள்ள நிலையில், அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலும் ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் பாடல் வெளியானதையொட்டி, எஸ்பிபி குறித்து தனது சுட்டுரைப் பதிவில் ரஜினிகாந்த் மனம் நெகிழ்ந்துள்ளாா். அந்தப் பதிவில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது: 45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி ‘அண்ணாத்த’ படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவா் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பாா் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com