மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் கனமழை: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சாலைகள் சேதமடைந்தன.

கனமழையால் மானாமதுரையில் உடைகுளத்தில் உள்ள கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.








