நெல்லை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமையன்பட்டி பகுதியில் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த மக்கள்.







