தமிழகத்தில் 5ம் கட்ட மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 5-ஆம் கட்டமாக 30 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 5ம் கட்ட மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 5-ஆம் கட்டமாக 30 ஆயிரம் இடங்களில் மெகா கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக இன்று ஞாயிற்றுக்கிழமையும், இதுவரை இல்லாத வகையில் 5-ஆவது கட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 30 ஆயிரம் இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவர்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com