ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்தியில்,
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்பட 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நேற்று ஒரே நாளில் 2,43,900 பேர் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ஆயுத பூஜையையொட்டி வடமாவட்டம், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.