நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஏனாதி மேல்பாக்கம் துணை தலைவர் பதவி: சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க கோரி பொதுமக்கள் முற்றுகை

ஏனாதி மேல்பாக்கம் துணை தலைவர் பதவியை சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image

ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி  துணை தலைவர் பதவியை சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்திய பொதுமக்கள்.

Updated On :25 அக்டோபர் 2021, 4:31 pm IST

கும்மிடிப்பூண்டி: ஏனாதி மேல்பாக்கம் துணை தலைவர் பதவியை சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2, 5 ஆகிய இரு வார்டுகளுக்கு நடந்து முடிந்த இடை தேர்தலில், 2 ஆவது வார்டில் ஜி.பரமசிவமும், 5 ஆவது வார்டில் என்.தேவராஜும் வெற்றி பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் இருந்து 4 ஆவது வார்டு உறுப்பினர் கே.சம்பத் ,பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் இருந்து 3 ஆவது வார்டு உறுப்பினர் இ.பாலா என இருவர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் தலா 3 வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில்,  ஊராட்சி மன்ற தலைவர் இ.பிரபு செலுத்தும் வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்கும் சூழல் எழுந்தது.

அப்போது நிகழ்விடம் வந்த சோழியம்பாக்கம் கிராம மக்கள் தலைவர், துணை தலைவர் என இருவரும் சோழியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் இருக்க கூடாது. ஊராட்சி தலைவர் தனது வாக்கை ஏனாதிமேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.