அந்த வகையில், திருநெல்வேலியில் 21,400 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் 21,658 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டுக்கல்லில் 10,671 சதுர அடி பரப்பளவில் 2 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணச்சநல்லூரில் 2,679 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 2 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லியில் 3,591 சதுர அடி பரப்பளவில் 85 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாடுதுறையில் 3,068 சதுர அடி பரப்பளவில் 99 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனத்தில் 3,270 சதுர அடி பரப்பளவில் 99 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 15 கோடியே 10 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.