தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!

தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 
Published on


தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக, தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீட்டரும், மக்கள் தொகை 9.60 லட்சமாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com