சென்னை: வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக. தமிழத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடிய, விடிய பலத்த மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா் ஆகிய பல மாவட்டங்களில் இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 8.2 மி.மீட்டர், தரமணி 7.5 மி.மீட்டர், பெருங்குடி, அண்ணா நகர் 7.3 மி.மீட்டர், மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், நந்தனம், கிண்டி, தாம்பரம், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், போரூர் பகுதியில் பரவலார மழை பெய்து வருகிறது.