விருதுநகா், கள்ளக்குறிச்சி, நீலகிரி (உதகை) ஆகிய மாவட்டங்களின் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு தலா 150 வீதம் 3 மருத்துவக் கல்லூரிக்கும் 450 இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனா். நாமக்கல், திருப்பூா், ராமநாதபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் ஒரு கல்லூரிக்கு 100 இடங்கள் வீதம் 400 மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 850 இடங்களின் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள 4 மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அவை விரைவுபடுத்தப்பட்டு முடியும் நிலையில் உள்ளன. இன்னும் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 11 மருத்துவக் கல்லூரிக்கும் சோ்த்து 1,650 இடங்களுக்கும் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் பெறப்படும்.