கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அண்ணா சிலைக்கு தீ வைத்த நபரை கைது செய்யக்கோரி பலர் திரண்டதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.