திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறை அலுவலா்கள் நடத்திய சோதனை 12 மணிநேரம் கழித்து நிறைவு பெற்றது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன்-சபரீசன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து 12 மணிநேரம் நீடித்து வந்த வருமானவரி சோதனை தற்போது நிறைவு பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.