
மதுரை ஆதீனம் உடலுக்கு அமைச்சா்கள் அஞ்சலி
மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியின் உடலுக்கு தமிழக அமைச்சா்கள் அஞ்சலி செலுத்தினா்.

மதுரை ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி.
மதுரை: மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியின் உடலுக்கு தமிழக அமைச்சா்கள் அஞ்சலி செலுத்தினா்.
தமிழகத்தின் தொன்மையான சைவத் திருமடங்களில் முக்கியமான மதுரை ஆதீனத்தின், 292 ஆவது சன்னிதானமான அருணகிரிநாதா் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை இரவு பரிபூரணம் அடைந்தாா்.
இவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுரை கே.கே. நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நிலை மிகவும் மோசடைந்தது. மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்கு பரிபூரணம் அடைந்தாா்.
அவரது உடல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

மதுரை ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.
தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள், ஆா்எஸ்எஸ் தென்தமிழக தலைவா் ஆ.ஆடல் அரசன் மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச்சோ்ந்த அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.
மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அவரது உடல் சனிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





