புதுச்சேரியில் தேசியக்கொடிக்கு கைகளால் வண்ணம் தீட்டி மாணவிகள் சாதனை

புதுச்சேரியில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில், இரண்டு பள்ளி மாணவிகள், 19 மணி நேரத்தில், 28 அடி அகலம் - 133 அடி நீளத்திற்கு, கைகளால் மூவர்ண்ண தேசிய கொடிக்கான வண்ணம் தீட்டி சாதன
புதுச்சேரியில் தேசியக்கொடிக்கு கைகளால் வண்ணம் தீட்டி மாணவிகள் சாதனை
புதுச்சேரியில் தேசியக்கொடிக்கு கைகளால் வண்ணம் தீட்டி மாணவிகள் சாதனை
Updated on
1 min read


புதுச்சேரியில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் வகையில், இரண்டு பள்ளி மாணவிகள், 19 மணி நேரத்தில், 28 அடி அகலம் - 133 அடி நீளத்திற்கு, கைகளால் மூவர்ண்ண தேசிய கொடிக்கான வண்ணம் தீட்டி சாதனை படைத்தனர்.

இந்த மாணவிகளின் சாதனையைப் பாராட்டி கலாம் புக் ஆப் ரெகார்டில் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில், இரு பள்ளி மாணவிகள் கைரேகை மூலம் மூவர்ண்ண தேசிய கொடிக்கான வண்ணம் தீட்டும் சாதனை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

28 அடி அகலம்,  133 அடி நீளத்திற்கு தேசியக் கொடியை வண்ணம் தீட்டி தயாரித்துள்ளனர். புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரில் உள்ள மணிகண்டன் - கமலி தம்பதியரின்   7ம் வகுப்பு மாணவி தீக்சிதா, 3ம் வகுப்பு மாணவி வர்ணிதா ஆகியோர், 19 மணி நேரம் 30 நிமிடம் எடுத்து தேசியக் கொடியில் வண்ணம் தீட்டினர். ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை கெளரவிக்கும் வகையில் இதனை செய்துள்ளனர்.

இதனை முன்னாள் அமைச்சர் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேல், ஜான்குமார் உள்ளிட்டோர், மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களது சாதனையை போற்றும் வகையில், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com