அவிநாசி: அவிநாசி வி.எஸ்.வி காலனியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி வி.எஸ்.வி காலனி காமராஜர் வீதியில் வசித்து வருபவர் விஜயன் மனைவி பிரியா(30). இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் பிரியா தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாகியும் செவ்வாய்க்கிழமை மாலை வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது, பிரியா உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சசாங் சாய் தலைமையிலான காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.