தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (ஆக. 27) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : பேருந்து விபத்தில் 3 பேர் பலி , 26 பேர் காயம்
புதிதாக 1,542 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,08,748-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 21 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,835-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,56,116-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | 25 கோடி பார்வைகளை நெருங்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,797 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.